வரும் 25 ஆம் தேதி உருவாகிறது REMAL புயல்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Photo of author

By Priya

வரும் 25 ஆம் தேதி உருவாகிறது REMAL புயல்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Priya

REMAL Puyal

REMAL Puyal: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் இடத்தில் சுழற்சி நிலவி வருவதாகவும், இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் 25-ஆம் தேதி காலையில் புயலாக உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே 25-ஆம் தேதி புயலாக வடமேற்கு வங்கக்கடலில் நிலைக்கொள்ளும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் புயல் உருவாகும் பட்சத்தில் ஓமன் நாடு பரிந்துரைத்த REMAL என்னும் பெயர் புயலுக்கு வைக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஜெயலலிதா அம்மா எனக்கு எப்போதும் டாடா சொல்லுவாங்க..!! திமிரு பட நடிகை ஈஸ்வரி..!!