வந்துவிட்டார் அடுத்த காமராஜர்!! இலவச இரவு பாடசாலை’தொடங்குகிறார் விஜய்!!

0
45

வந்துவிட்டார் அடுத்த காமராஜர்!! இலவச இரவு பாடசாலை தொடங்குகிறார் விஜய்!!

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி இரவு பாடசாலை தொடங்க இருக்கிறார். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்த திட்டத்திற்கு பிறகு இந்தப் பாடசாலை திட்டம் வர இருக்கிறது. மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை அளிப்பது என்பதில் விஜய் அவர்கள் முழு வீச்சாக உள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஏற்கனவே மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என கூறினார்.

விஜய்யின் இந்த அடுத்தடுத்த நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. அந்த தினத்தில் ’இரவு பாடசாலை திட்டமானது தொடங்க இருக்கிறது. இலவச இரவு பாட சாலை திட்டத்திற்கான இடம் ஏற்பாடு செய்து தரப்படுவதோடு, அதற்கான வாடகை மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

அண்மையில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை வரவழைத்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த விஜயின் நகர்வுகள், இலவச பாடசாலை திட்டம் ஆகியவை முக்கியமான இடத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவருடைய ரசிகர்கள் அடுத்த காமராஜர் தமிழ்நாட்டிற்கு கிடைத்துவிட்டார் என பெருமைப்பட்டு வருகின்றனர்.