சென்னைக்கு அடுத்த மழை இந்த தேதியில் தான்.. உறுதிபடுத்திய வெதர்மேன்!!

0
140
#image_title

சென்னைக்கு அடுத்த மழை இந்த தேதியில் தான்.. உறுதிபடுத்திய வெதர்மேன்!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஒரு கோரத்தாண்டவத்தை காட்டி விட்டு சென்றிருக்கிறது. இந்த புயலுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று வரை மழை வெள்ள நீர் வடியாமல் இருப்பதினால் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது.

இந்நிலையில் தலைநகர் சென்னைக்கு அடுத்து மழை எப்பொழுது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் புதிய தகவல் ஒன்றை தெரிவித்து இருக்கிறார். டிசம்பர் 20 ஆம் தேதி வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்றும் இதனால் டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் சென்னை மட்டும் இன்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களுக்கும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதியில் தான் உறுதிப்படுத்த முடியும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து இருக்கிறார்.