உலகத்தரத்தில் அடுத்து  உருவாக்கப்படும்  ஃபிலிம் சிட்டி! 100 ஏக்கரில்  பிரம்மாண்டம்!!

0
97
The next world-class film city! Huge on 100 acres!!
#image_title

உலகத்தரத்தில் அடுத்து  உருவாக்கப்படும்  ஃபிலிம் சிட்டி! 100 ஏக்கரில்  பிரம்மாண்டம்!!

சுற்றுலாத் தளத்திற்கு மிகவும் பெயர் போன ஒன்றுதான் புதுச்சேரி மாநிலம் ஆகும் . இது மினி கோவா என்றும் பலரால் அன்புடன் அழைக்கப்படுகிறது.இந்த மாநிலத்தில் சிறப்புமிக்க கட்டிடக்கலை , கடற்கரை போன்ற எண்ணற்ற தளங்கள் உள்ளதால் வெளி ஊரில் இருந்து வருபவர்களுக்கும்  திரைப்படம் எடுப்பவர்களுக்கும் இது மிகவும் ஏதுவான தளமாக உள்ளது.

இங்குதான் தமிழ் சினிமாவின் பல படங்கள் எடுக்கப்பட்டது.இவ்வளவு சிறப்பு வாய்ந்தாக இருந்தாலும் சென்னையை  போன்று சிறப்பு மிக்க  ஃபிலிம் சிட்டி ஒன்று புதுச்சேரியில் இல்லை.

இதனால் மணப்பட்டில் 100 ஏக்கர் பரப்பரவில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஃபிலிம் சிட்டி ஒன்று விரைவில் அமைக்கப்பட இருக்கிறது.இதன் மூலம் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இதனைத் தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் புதுச்சேரியை நோக்கி செல்கின்றனர். அங்குதான் குறைந்த செலவில் எந்த வித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து படபிடிப்பு நடத்தப்படும் என்று பலர் தெரிவிக்கின்றனர்.

இது சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் படபிடிப்பு குழுவினருக்கு மிகவும் வசதியாக உள்ளது. இங்கு குறைந்த செலவில் படபிடிப்பு செய்யப்படுகிறது.இதனால் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம்  போன்ற பல மொழி படங்கள் எடுக்கப்படுகின்றது.

புதுசேரியில் ஒரு ஃபிலிம் சிட்டி உருவாக்குவதன் மூலம் அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்பதுடன் உள்ளூர் மக்களின் வேலைவாய்புகளும்  அதிகரிக்க முடியும்.

கலைத்துறையின் கோரிக்கை ஏற்று இதற்காக  100 ஏக்கர் பரப்பரவில் மணப்பட்டில் கடந்த 2007 ம் ஆண்டு இதற்கான  பணி துவங்கப்பட்டது.பின்னர் நிதி பிரச்சனையின் காரணமாக இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது.இப்பொழுது மீண்டும் இதற்கான பணி முழு விரைவில் துவங்கப்பட உள்ளது.

author avatar
Parthipan K