விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?

0
104
The nurse who took the lives of babies by injecting poison!
The nurse who took the lives of babies by injecting poison!

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?

அர்ஜென்டினா நாட்டில் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் தினசரி பல கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு  நல்ல படியாக குழந்தைகளுடன் வீட்டுக்கு செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவமனையில் ஆரோக்கியமாக ஐந்து குழந்தைகள் பிறந்தது.ஆனால் பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குழந்தைகளின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தவை இதற்கு காரணம் யாரும் இல்லை என குழந்தைகளின் பெற்றோர்கள் இதை பற்றி யாரும் பெரிதும்  கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அந்த மருத்துவமனையில் கடைசியாக உயிரிழந்த குழந்தையின் பாட்டி கடந்த வாரம் போலீசார்களிடம்  புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார்கள் விசாரணை நடத்தி வந்தார்கள்.விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளி வந்தது.குழந்தைகளின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல் நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

மேலும் இது பற்றி விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழந்த ஐந்து குழந்தைகளில் இரண்டு குழந்தைகளின் மருத்துவ பதிவுகளை மறுஆய்வு செய்ததில் அந்த குழந்தைகளுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.இதனை அரங்கேற்றியவர் நர்ஸ் பிரெண்டா அகுவேரோவை போலீஸாரால் கைது செய்து மேல் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

மேலும் மற்ற மூன்று குழந்தைகளின் மருத்துவ பதிவுகளில் மறுஆய்வு நிலுவையில் உள்ளநிலையில்  அந்த குழந்தைகளையும் இவர் தான் கொலை செய்திருப்பார் என சொல்லப்படுகிறது.இருந்தாலும் மறு ஆய்வுக்கு பின்னரே உண்மைகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகும்.

இதனால் மருத்துவமனையில் அசம்பாவிதம் ஏதும்  நடைபெறமால் இருக்க அங்கு போலீசார்களின்  பாதுகாப்பும் போடப்பட்டு வருகின்றது.இந்த சம்பவம் மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K