ஒரே நேரத்தில் மூன்று மைனர்களிடம் கைவரிசையை காட்டிய பாதிரியார்! சர்ச்சில் பட்டப் பகலிலே இப்படியா?

0
87
The priest who showed hands to three minors at the same time! Was it like this on Churchill's day?
The priest who showed hands to three minors at the same time! Was it like this on Churchill's day?

ஒரே நேரத்தில் மூன்று மைனர்களிடம் கைவரிசையை காட்டிய பாதிரியார்! சர்ச்சில் பட்டப் பகலிலே இப்படியா?

பெண் பிள்ளைகளுக்கு இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமான உண்மை. கள்ளக்குறிச்சி விவகாரமே தற்போது வரை உண்மையை கண்டறிய முடியவில்லை. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புனிதர் அருள் ஆனந்தர் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த சர்ச்சில் தினந்தோறும் மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆலயத்தின் பாதிரியாராக ஜான் ராபர்ட் என்றவர் உள்ளார். இவர் அந்த சர்ச் மட்டும் இன்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயத்திற்கும் இவர் தான்  பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் சர்ச்சுக்கு வரும் பெண் குழந்தைகளிடம் அத்துமீறி நடந்து வந்துள்ளார்.

இதை வழக்கமாகவே இவர் வைத்துள்ளார். தொடர்ந்து மூன்று பள்ளி மாணவர்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அம் மாணவிகள் அவர் கொடுக்கும் பாலியல் துன்புறுத்தலை பொறுக்க முடியாமல் குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். மாணவிகள் புகார் அளித்ததின் பேரில் பாதிரியாரை அழைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் அவர் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் அந்த பாதிரியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.