ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி!

0
151

கடந்த ஜூலை மாதம் 11 தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தங்களை கேட்காமல் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அவசரம் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொது செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம். இந்த நோட்டீசுக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பன்னீர்செல்வம் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மறுபடியும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, சுதன்சு துலியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு ஏற்கனவே ஒத்தி வைக்க கோரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பன்னீர்செல்வம் பரப்பு ஒரு வாரத்திற்குள் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டது.

அத்துடன் வரும் 30ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பும் தங்களுடைய வாதங்களையும், ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போது இருக்கின்ற நிலையில் எந்த விதமான இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்து வழக்கு விசாரணையை 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.