பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை?

Photo of author

By Parthipan K

பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை?

Parthipan K

The teenager who forcibly invited the college student in broad daylight!..The student who ran away!..Police investigation?

பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை?

புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த தான் இந்த 18 வயதுடைய மாணவி.இவர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கோட்டுச்சேரியை சேர்ந்தவர் தான் பால் எடிசன்.இவருடைய வயது 33.

இவர் அதேபகுதியில் உள்ள ஹோட்டல்  ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கல்லூரி மாணவி அந்த ஹோட்டல் வழியாக தான் சாலை ஓரமாக நடந்து செல்வார்.இதன ஹோட்டல் ஊழியர் கண்காணித்து வந்துள்ளார்.

அன்று கல்லூரி மாணவி செல்லும்போது அக்கறையோடு பால் எடிசன் அவரை பற்றி விசாரித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அந்த மாணவி கல்லூரிக்கு படிக்க சென்ருள்ளார்.அப்போது தனது வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வலுக்கட்டாயமாக அந்த மாணவியை இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரது பிடியில் இருந்து திமிறிய மாணவி அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தாா்.துரத்தி பிடித்த அவர் இது குறித்து யாரிடமாவது சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.பயத்தில் இது குறித்து மாணவி தனது தாயாரிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுள்ளார்.

மாணவியின் தாயார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.பிறகு   கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் பால் எடிசன் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.பட்ட பகலில் ஒரு கல்லூரி மாணவியை இச்சைக்கு அழைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.