மோட்டர்சைகளில் சென்ற வாலிபர் திடீர் மரணம்! சடலத்தை மீட்ட போலீசார்!

0
136
The teenager who went on motorbikes died suddenly! The police recovered the body!
The teenager who went on motorbikes died suddenly! The police recovered the body!

மோட்டர்சைகளில் சென்ற வாலிபர் திடீர் மரணம்! சடலத்தை மீட்ட போலீசார்!

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ,விருத்தாசம்பட்டி எம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (21).இவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.இவர் சங்ககிரியை அடுத்துள்ள கொங்கணாபுரம் பிரிவு சாலையில் உள்ள தாபா உணவு விடுதியில் வேலை செய்து வருகிறார்.இவர் வேலை முடிந்த பிறகு கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரில் அவருடைய உறவினர் வீட்டிற்கு மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் ஒருக்காமலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளில்லிருந்து கீழே விழுந்துள்ளார்.அப்போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .மேலும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K