கரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு?! நடந்தது என்ன ??
கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்தவர் அரபுலீஸ்வரன். இவரது மகன் பூவரசன் இவருடைய வயது 24. இவர் வெல்டர் வேலையில் பணியாற்றி வந்துள்ளார். பணியில் ஈடுபாடு இல்லாமல் அவ்வேலையை பாதியிலேயே விட்டுவிட்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் சரியாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலே இருந்து வந்துள்ளார். இதை அறிந்த பூவரசனின் தந்தை அம்புலிஸ்வரன் அடிக்கடி அவரை கண்டபடி திட்டியுள்ளார். வீட்டில் வெட்டியாக இருக்கிறாயா என்று அவ்வப்போது குத்தி குத்தியும் காட்டியுள்ளார்.
எல்லாவற்றையும் சகித்து கொண்டு வீட்டில் இருந்த பூவரசன் ஒரு கட்டத்தில் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிமருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அவரின் தந்தை உடனடியாக பூவரசனை மீட்டு கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பின் பூவரசனின் உடலை கைப்பற்றி காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.