ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி! கணவன் செய்த வெறிச்செயல்!

Photo of author

By Hasini

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி! கணவன் செய்த வெறிச்செயல்!

Hasini

The wife who refused to comply with the wish! Husband's hysteria!

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி! கணவன் செய்த வெறிச்செயல்!

கடந்த சில வருடங்களாக கணவன் சந்தேகத்தினால் மனைவியை கொலை செய்வதும், மனைவி சில காரணங்களால் கணவனை கொலை செய்வதும் நடந்தேறி வருகிறது.

அதே போல் மனைவியை சந்தேகமடைந்த கணவன் ஒருவர் விவரிக்கிறார்.கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் வயது 37.இவரது மனைவி உமா வயது 35 இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியை கொலை செய்து தலைமறைவாக இருந்த கணவனை நேற்று முன்தினம் வெள்ளி மலைப்பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அவரிடம் செய்த விசாரணையில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்.கடந்த ஒரு வருடமாக அவள் என்னிடம் சரியாக பேச வில்லை.மேலும் என்னை அலட்சியப்படுத்தி வந்தார்.

அவள் என்னிடம் சரியாக பேசுவது இல்லை என்றும் அவளது உறவுக்கார ஆண்களிடம் மட்டும் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை.மேலும் நான் ஆசைபட்டு அழைத்தால் அவள் மறுத்து விடுவாள்.

இவ்வாறு இருந்த சூழ்நிலையில் அவளின் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனால் அவளை இரவோடு இரவாக கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்தேன் என கூறினார்.

அதனை தொடர்ந்து அன்று இரவு மனைவியை கழுதை அறுத்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்ததாகவும் கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.