இனி மாதம்தோறும் ரூ.2500! அதிரடி காட்டிய முதல்வர்!

0
120
Now Rs.2500 per month! Chief who showed action!
Now Rs.2500 per month! Chief who showed action!

இனி மாதம்தோறும் ரூ.2500! அதிரடி காட்டிய முதல்வர்!

கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு பெருமளவு தாக்கம் காணப்படவில்லை என்றாலும் இந்த ஆண்டு அதன் தாக்கம் அதிக அளவே காணப்படுகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் அதிக அளவு பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.இந்த கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.வயது முதிர்ந்தவர் முதல் இளம் குழந்தைகள் வரை பரவி வருகிறது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து மீட்டு கொண்டு வர அரசாங்கமும் பல்வேறு நடவேடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியையும் மக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்று அதிக அளவு பரவாமல் இருக்க முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் தமிழ்நாடு,ஆந்திரா,டெல்லி போன்ற மாநிலங்களில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் டெல்லியில் நாளுக்குநாள் பல ஆயிரம் கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கு உறுதியாகுவதும்,பலியாகி வருவதும் வழக்கமாக உள்ளது.

அம்மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்தின் மக்களுக்கு பலவித சலுகைகளை தெரிவித்து வருகிறார்.அந்தவகையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50000  நிதி உதவி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி ஓர் குடும்பத்தில்  கொரோனா தொற்றால் உயிரிழந்த தாய் அல்லது தந்தை அவர்களின் பிள்ளைகளுக்கு மாதம் தோறும் ரூ.2,500  வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.அத்தோடு அவர்களுக்கு இலவச கல்வி. என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சலுகை 23 வயதிற்குள்ளான இளைஞர்களுக்கு மேட்டுமே என கூறியுள்ளார்.அத்தோடு குடும்ப அட்டத்தாரர்களுக்கு இலவச அரிசி வழங்கு திடத்தையும் மேம்படுத்தியுள்ளார்.குடும்பம் அட்டை இல்லாதவர்களுக்கும் இலவச அரசி வழங்கும் படியும் கூறியுள்ளார்.