கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

0
97
#image_title

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன், மனைவி இடையே மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள தம்பதிகளுக்கு இடையே இது போன்ற ஒற்றுமை, சகிப்பு தன்மை இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர்.

இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும் சூழல் உருவாகி விடுகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்:-

வெற்றிலை, பச்சை கற்பூரம். குங்குமம், மஞ்சள், கணவன், மனைவியின் புகைப்படம்.

பரிகாரம் செய்யும் முறை…

முதலில் ஒரு வெற்றிலையில் கணவன் பெயர் மற்றும் மற்றொரு வெற்றிலையில் மனைவி பெயரை எழுதிக் கொள்ளவும். குங்குமத்தை கரைத்து அதை பயன்படுத்தி பெயர் எழுதினால் சிறப்பு.

அடுத்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கணவன் பெயர் எழுதிய வெற்றிலையை வைக்கவும். அதன் மேல் அவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைக்கவும். பின்னர் மனைவி பெயர் எழுதிய வெற்றிலையை வைக்கவும். அதன் மேல் அவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைக்கவும்.

பிறகு அதன் மேல் 2 குண்டு மஞ்சள் மற்றும் சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு டப்பாவை மூடி யார் கண்கள் மற்றும் கைகளுக்கு படாத ஒரு இடத்தில் வைக்கவும். வாரம் ஒரு முறை டப்பாவில் உள்ள வெற்றிலையை மட்டும் மாற்றவும். பழைய வெற்றிலையை யார் காலும் படாத இடத்தில் போட்டுவிட்டு புது வெற்றிலையை எடுத்து கணவன் மனைவி பெயரை எழுதி வைக்கவும்.

இதேபோல் 48 நாட்களுக்கு ஒருமுறை குண்டு மஞ்சள் மற்றும் பச்சை கற்பூரத்தை நீக்கி விட்டு புது மஞ்சள் மற்றும் பச்சை கற்பூரத்தை வைக்கவும். ஒருமுறை மஞ்சள் கிழங்கு மாற்றுவதற்குள் நிச்சயம் கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும்.