நாம் செய்யும் இந்த தவறுகள் மூதேவி.. வீட்டிற்கு வர காரணமாகிவிடும்!

0
166
#image_title

நாம் செய்யும் இந்த தவறுகள் மூதேவி.. வீட்டிற்கு வர காரணமாகிவிடும்!

வீட்டில் தரித்திரம், மூதேவி இருந்தால் நல்ல காரியங்கள் நடப்பது அரிதாகி விடும். கடன் பிரச்சனை, பண விரையம் ஆகும். கோடி கோடியாய் சம்பாதித்தாலும் ஒரு பைசா கையில் தாங்காது.

கடன் வாங்கும் சூழல் அதிகம் ஏற்படும். நம்மை படுத்தி எடுக்கும் மூதேவி வீட்டிற்கு வரக் காரணம் நாம் செய்யும் சில தவறுகள் தான்.

முதலில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அலங்கோலமாக இருந்தால் மூதேவி வீட்டில் தங்கிவிடும்.

கேஸ் அடுப்பு / விறகு அடுப்பு.. எந்த அடுப்பாக இருந்தாலும் சமைப்பதற்கு முன் அதை ஒருமுறை சுத்தம் செய்துவிட வேண்டும்.

காலை நேரத்தில் சீக்கிரம் வீட்டை பெருக்கி சுத்தம் செய்து விட வேண்டும். மாலை 6 மணி கடந்த பின்னர் வீட்டை பெருக்க, துடைக்கக் கூடாது.

மாலை, இரவில் பெண்கள் தலை வாரக் கூடாது.

வீட்டில் சர்க்கரை, அரிசி, பருப்பு, கல் உப்பு ஆகியவற்றை குறைவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் இல்லை, தீர்ந்து விட்டது என்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.

சாப்பிட்டுவிட்டு தட்டுகளை கழுவாமல் வைப்பதால் மூதேவி தங்கி விடும்.

வீட்டில் ஓட்டடை இருந்தால் மூதேவி குடி வந்து விடும்.