இந்த இரண்டு பொருட்களை வைத்து வீட்டில் உள்ள எலிகளை ஓட ஓட விரட்டலாம்!

0
103
#image_title

இந்த இரண்டு பொருட்களை வைத்து வீட்டில் உள்ள எலிகளை ஓட ஓட விரட்டலாம்!

உங்களில் பலரது வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவு காணப்படும். எலிகள் வீட்டில் உள்ள காய்கறிகள், பேப்பர், பொருட்களை சேதப்படுத்துவதால் நமக்கு அவை பெருந் தொல்லையாக மாறி விடுகிறது. அதுமட்டும் இன்றி எலிகள் கடித்த பொருட்களை உண்டால் நம் உயிருக்கு ஆபத்தாகி விடும். எனவே இந்த எலிகளை நாப்தலின் உருண்டைகளை வைத்து எளிதில் ஒழித்து விடலாம்.

1)நாப்தலின் உருண்டை
2)பாக்கு

ஒரு நியூஸ் பேப்பரில் 2 அல்லது 3 நாப்தலின் உருண்டைகளை போட்டு இடித்து தூளாக்கி கொள்ளவும். அடுத்து ஒரு நிஜாம் பாக்கு பேக்கட்டை பிரித்து அதில் கொட்டி கலந்து விடவும்.

பின்னர் ஒரு நியூஸ் பேப்பரை 4 அல்லது 5 ஆக கட் செய்து வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வைக்கவும். அதில் நாப்தாலின் தூள் + பாக்கை கொட்டி வைக்கவும்.

இதை எலிகள் சாப்பிட்ட சில நிமிடங்களில் வயிறு வீங்கி இறந்து விடும்.