இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!

0
134
#image_title

இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!

நாம் அனைவரும் சொந்த வீடு அல்லது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதில் எந்த வீடாக இருந்தாலும் சில எதிர்பாராத காரணங்களால் நாம் வேறு வீடு மாறும் சூழல் ஏற்படும் பொழுது குடி இருந்த வீட்டில் சில விஷயங்களை முறையாக செய்யாமல் சென்று விடுவதால் கஷ்டங்கள் நம்மை தொடர்ந்து வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பிரச்சனைகள் நம்மை தொடர்கிறது.

இந்த பிரச்சனைகள் உங்களை விட்டு நீங்க வேண்டும்என்றால் நீங்கள் வசிக்கும் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு குடி போகும் பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்ய வேண்டும்.

பரிகாரத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள்:-

பித்தளை செம்பு, தேங்காய், மஞ்சள், குங்குமம், பன்னீர், மாவிலை, நெய், திரி, ஏலக்காய், பச்சரிசி.

பரிகார பூஜை செய்யும் முறை:-

இந்த பரிகார பூஜை சொந்த வீடு மற்றும் வாடகை வீடு என இரண்டிற்குமே பொருந்தும். வீடு மாறப் போவதற்கு முதல் நாள் ஒரு பித்தளை கலச செம்பு, ஒரு தேங்காய் வாங்கி வாசனை நிறைந்த பன்னீரில் கழுவி மஞ்சள் குங்குமம் வைக்கவும்.

செம்பு முழுவதும் பச்சரிசி நிரப்பி அதில் சிறிது பச்சைக் கற்பூரம் மற்றும் மூன்று ஏலக்காய் போட்டுக் கொள்ளவும். பின்னர் அதன் மீது மாவிலை வைத்து நடுவில் கும்பம் போல் தேங்காய், பூ வைத்து தூப தீப ஆராதனை காட்டவும். பின்னர் “தெய்வமே, நாளை வீடு மாறப் போகிறோம். உம்முடைய இறை சக்தியை இந்த கலசத்தில் ஆவாகணம் செய்து எடுத்துச் செல்கிறோம். எங்களோடு வந்து எங்களது புது வீட்டில் கொலுவிருந்து எங்களுக்கு சகல நலனும்,
செல்வமும் தந்து ஆசிர்வதிக்க வேண்டும்” என்று மனதார சொல்லி வேண்டிக் கொள்ளவும்.

மறுநாள் குடி பெயர உள்ள வீட்டில் பால் காய்ச்சப் போகும் போதே இதை முதலில் பத்திரமாக எடுத்துச் சென்று புதிதான சொந்த வீடு அல்லது வாடகை வீட்டில் வைத்து விளக்கேற்றி பின் மற்ற சாமி படங்களை வைத்து பால் காய்ச்சவும். பலரும் இப்படி செய்யாமல் பூஜை செய்த பலன்களை அங்கேயே விட்டு விடுகின்றனர். இந்த பரிகார பூஜையை முறையாக செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.