
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜித்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதான கட்சிகள் விமர்சனம் செய்துள்ள நிலையில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அமைதியாக உள்ளது மக்கள் மாதிரில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திருமாவளவனை டார்கெட் செய்த இணையவாசிகள் குருமா என அவரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு ஆதரவாக சில ஊடகங்கள் செயல்படும். அதுவும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் ஊடகங்களில் நாட்டில் நடக்கும் அவலங்களை பற்றி சொல்வதை விட திமுக ஆட்சியின் சிறப்புகளை தான் எப்பவும் பெருமை பேசிக்கொண்டு திரிவார்கள். அந்த அளவுக்கு ஆளும் கட்சிகள் ஊடகங்களை தங்கள் கைக்குள் வைத்திருக்கும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் சாத்தான்குளம் தந்தை மகன் லாக் அப் மரண நிகழ்வு நடந்தபோது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். இந்த ஆட்சியை இப்போதே கலைக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் பேட்டி கொடுத்தார். வைகோ, தொல்.திருமாவளவன் போன்றோர் அதிமுக கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.
அதிலும் குறிப்பாக திருமாவளவன் சாத்தான்குளம் சம்பவத்தை அதிமுக ஆட்சியின் படுகொலை என்று ஊடகங்களில் வர்ணித்தார். தற்போது சிவகங்கை திருபுவனத்தில் அஜித்குமார் லாக் அப் மரணத்திற்கு இதுவரை வாய் திறக்காமல் மெளனமாக உள்ளார். காவல் நிலைய மரணம் என்று இந்த படுகொலை பற்றி கருத்து தெரிவித்த்துள்ளார் திருமாவளவன்.
திமுக கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் அவர்கள் செய்யும் எல்லா காரியங்களுக்கும், திமுக ஆட்சியில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கும் வைகோ மற்றும் திருமா போன்றோர் பதில் பேசாமல் அமைதியாய் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்போதான் 6 சீட்டில் இருந்து 10, 15 சீட் திமுகவிடம் கேட்கலாம்னு இருக்கிறோம், இந்த நேரத்தில் இது போன்ற விஷயங்களுக்கு விமர்சனம் செய்தால் சீட்டு பேரம் பேச முடியாது என்று திருமாவும், வைகோவும் நினைத்துக்கொண்டு அமைதி காப்பதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் இவர்களை கலாய்த்து வருகின்றனர்.