அதிமுகவுக்கு எதிராக திருமாவளவன் தொடுத்த வழக்கு: அதிரடி தீர்ப்பு

0
233

அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி செல்லாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளராக முருகுமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராக திருமாவளவன் போட்டியிட்டனர்

இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்யக் கோரி, அதிமுக எம்எல்ஏ வெற்றிக்கு எதிராக திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள் மற்றும் பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது

இந்த தீர்ப்பின்படி அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும் என்றும் திருமாவளவனின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்தது. இதனை அடுத்து திருமாவளவன் தொடுத்த வழக்கு தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திருமாவளவன் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்பி ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleரோபோ சங்கர் எடுத்த அடுத்த அவதாரம்:
Next articleஆமா நான் பிஸ்கோத்துதான்:இயக்குனர் கண்ணனோடு கைகோர்த்த சந்தானம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here