இந்த கை வைத்தியம் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

0
81
this-hand-remedy-will-give-you-a-restful-sleep-try-it-today
this-hand-remedy-will-give-you-a-restful-sleep-try-it-today

இந்த கை வைத்தியம் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

இன்றைக்கு பலர் இரவில் நிம்மதியாக தூங்குவதே இல்லை.வேலைப்பளு,குடும்பத்தில் பிரச்சனை,உடல் நலக் கோளாறு என்று அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகுவதால் தான் நிம்மதியான தூக்கம் கிடைக்க மாட்டேங்குது.எனவே நிம்மதியான தூக்கம் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:

1)பிரியாணி இலை
2)ஜாதிக்காய் பொடி
3)பால்

செய்முறை விளக்கம்:

ஒரு ஜாதிக்காயை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அல்லது நாட்டு மருந்து கடையில் ஜாதிக்காய் பொடி கிடைக்கும்.50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் சுத்தமான பசும்பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு பிரியாணி இலை மற்றும் 1/4 தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

1)ஆரஞ்சு பழ தோல்
2)தேன்

செய்முறை விளக்கம்:

ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்து வெயிலில் போட்டு நன்கு காய வைத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த ஆரஞ்சு பொடி இரண்டு தேக்கரண்டி அளவு ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து குழைத்து சாப்பிடவும்.இவ்வாறு செய்தால் இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.