கண் திருஷ்டியை ஒழிக்கும் தூபம் இது..!

0
112
#image_title

கண் திருஷ்டியை ஒழிக்கும் தூபம் இது..!

நம் மீது பொறாமை குணம் உள்ளவர்கள், எதிரிகள் ஆகியோரால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி… வீட்டில் கெட்ட நிகழ்வுகளை அதிகம் ஏற்படுத்தும்.

அடிக்கடி நோய்வாய்ப்படுத்தல், அடிபடுதல் போன்றவை ஏற்பட்டால் வீட்டில் கண் திருஷ்டி உள்ளது என்று அர்த்தம்.

இந்த கண் திருஷ்டியை காணாமல் போகச் செய்ய சில பொருட்களை கொண்டு தூபம் போட வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்….

*பச்சை கற்பூரம்
*சாம்பிராணி
*காய்ந்த மருதாணி இலை
*வெள்ளை குங்கிலியம்

பரிகாரம் செய்வது எப்படி?

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தூள் செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

இந்த பொடியை வைத்து தூபம் போட்டால் வீட்டில் உள்ள கண் திருஷ்டி ஒழியும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

கண் திருஷ்டியை போக்கும் மற்றொரு பரிகாரம்….

தேவையான பொருட்கள்….

*வெண் கடுகு
*சாம்பிராணி

பரிகாரம்….

சாம்பிராணி தூபத்தில் 1 ஸ்பூன் அளவு வெண் கடுகு சேர்த்து வீடு முழுவதும் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பில்லி சூனியம், ஏவல் அனைத்தும் நீங்கும். வெண்கடுகிற்கு கண் திருஷ்டியை போக்க கூடிய ஆற்றல் உள்ளது.