புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

0
34
#image_title

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மிதுனம்

கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், மிதுன ராசிக்காரர்களே உங்களக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்கள் மேல், சூரியனின் ஏழாம் பார்வை, கர்ம ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுடைய வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். நிதிநிலை சீராகும். நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வு பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

சிம்மம்

கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு நல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை உயரும். அதனால், முதலீடு செய்ய தக்க சமயம் இது. வியாபாரத்தில் நல்ல கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. உங்கள் செயல்பாடுகள் வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக இருக்கும். குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய நேரமாக அமையப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் நிம்மதி பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். மனைவியுடன் இன்பமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்களே தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். மூத்தவர்களின் சொல்படி கேட்டு நடப்பீர்கள். பணி செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். எதிர்காலம் குறித்த திட்டம் வகுப்பீர்கள். நிதிநிலை சீராக இருக்கும். சமூகத்தில் மரியாதை பெருகும். காதல் உறவில் சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

தனுசு

கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. குடும்பத்திலும், தொழிலிலும் நல்ல லாபம் பெறுவீர்கள். நிதி தட்டுப்பாடு பிரச்சினைகள் தீரும். பதவி உயர்வு பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சம்பவ உயர்வும் பெறுவீர்கள். வேலையில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் மனநிலை சிறப்பாக இருக்கும்.

 

author avatar
Gayathri