இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் வழக்கில் மூன்று பேர் கைது

0
153
#image_title

இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் வழக்கில் மூன்று பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோழிநாயக்கரன் பட்டி கிராமத்தில் வசித்து வந்த குணசேகரன் தெய்வா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் .

இருவருக்கும் இடையே நடந்த குடும்ப சண்டையின் காரணமாக தெய்வா தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் மாமியார் உமாராணி(55), மாமனார் ஆறுமுகம்(60),
மற்றும் கணவர் குணசேகரன்(38) மூன்று பேரும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாமனார் ஆறுமுகம் தனது மகன் குணசேகரன் திருப்பூரில் பணிக்கு சென்ற பின்பு மருமகளை தகாத உறவு அழைத்ததாகவும், இது குறித்து தனது கணவனிடம் தெரிவித்தும் கணவன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து கேட்டதற்கு படிப்பு படிப்பு என சொத்து மற்றும் பணத்தையும் வீண் விரையம் செய்வதாகவும், மருமகள் விவசாய நிலத்தில் எந்த ஒரு பணியும் செய்யாமல் ஊரை ஏமாற்றுவதாக கூறி திட்டுவதாகவும் , தனது மகனுக்கு முன்னுக்குப் பின் முரணாக தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை நம்பிய குணசேகரன் மனைவி தெய்வாவை முழுவதுமாக நம்பாமல் இதனால் மன உளைச்சலில் இருந்த தெய்வா தனது மகன் மற்றும் மகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

இதனை அடுத்து மாமனார் மாமியார் மற்றும் கணவன் ஆகிய மூவரையும் தற்கொலை வழக்காக பதியப்பட்டிருந்த வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றப்பட்டு கைது செய்யப்பட்டு சேலம் சிறைக்கு அனுப்பினர்.

author avatar
Savitha