மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி… தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

0
34

 

மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி… தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

 

தர்மபுரி மாவட்டத்தில் கீழே அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. அப்பொழுது காரிமங்கலத்தில் சாலையில் மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது. அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை அகற்றாமல் இருந்தனர்.

 

இதையடுத்து காரிமங்கலத்தில் உள்ள சாலை வழியாக தாய் மற்றும் மகன் மற்றும் மேலும் ஒரு நபர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அறுந்து கிடந்த அந்த மின் கம்பியை தாய், மகன் மற்றும் அந்த நபர் என அடுத்தடுத்து மூவரும் தெரியாமல் மிதித்தனர். அப்போது மின்சாரம் தாக்கியதில் தாய், மகன் உள்பட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இறந்த மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.