திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்துவிடுங்கள்!!

Photo of author

By Parthipan K

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்துவிடுங்கள்!!

Parthipan K

Announcement released by Tirupati Devasthanam! The new rule will be effective from March 1!

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்துவிடுங்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் முதல் தங்கும் விடுதிகள் வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு கடும் கெடுபிடி உள்ளது. 

மார்ச்ச மாதத்திற்கான சிறப்பு தரிதசன டிக்கெட்களின் முன்பதிவு இன்று தொடங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  300 ரூபாய்க்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல், மே மாதத்திற்கான திருமலை அங்கப்பிரதட்சிணத்திற்கான டிக்கெட்டுகள் இன்று மதியம் 2 மணியளவில் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீவாரி மற்றும் திருமலை திருக்கோயில்களின் ஆன்லைன் தரிசனம், கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவா, அர்ஜிதா பிரம்மோத்சவம், சாஹாஸ்ரா தீபலங்காரா சேவா ஆகியவற்றின் தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.