இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!!

0
98
#image_title

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!

 

இன்று தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 7வது சீசனில் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றது.

 

தமிழ் நாடு பிரீமியர் லீக்  என்று சொல்லப்படும் TNPL கிரிக்கெட் தொடர் 2016ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரை நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் சென்னையை மையப்படுத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மூன்று முறையும் தூத்துக்குடியை மைய்ப்படுத்திய டூட்டி பேட்ரியாட்ஸ் அணி ஒரு முறையும், மதுரை பாந்தர்ஸ்அணி ஒரு முறையும் வென்றுள்ளது.

 

8 அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் தொடர் திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. நடைபெறும் 7வது சீசனுக்கான TNPL கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது. அதன்படி ஜூன் 12ம் தேதி அதாவது இன்று தொடங்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுக்கும் தலா 7 போட்டிகள் வீதம் 28 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும் 4 பிளே ஆப் போட்டிகள் உள்பட 32 போட்டிகள் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போன்றே இம்பேக்ட் பிளேயர் விதிமுறையும் டி.ஆர்.எஸ் விதிமுறைகளும் பயன்படுத்தப்படவுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. இந்தாண்டு இன்று தொடங்கும் டிஎன்பிஎல் தொடரின் முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதவுள்ளது.

 

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கோவையில் நடைபெறவுள்ளது.