வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க.. இந்த ஒரு பொடியை தண்ணீர் கலந்து தெளியுங்கள்..!

0
103
#image_title

வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க.. இந்த ஒரு பொடியை தண்ணீர் கலந்து தெளியுங்கள்..!

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க நாமும் பல பூஜை செய்து வருகிறோம். ஆனால் 6 வாசனை பொருட்களால் செய்யப்பட்ட திருமஞ்சன பொடியை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்து வந்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை கற்பூரம்
2)இலவங்கம்
3)சந்தன கட்டி
4)ஏலக்காய்
5)ஜவ்வாது
6)கஸ்தூரி மஞ்சள் பொடி
அல்லது மஞ்சள் கிழங்கு

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு சுத்தமான ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை….

இந்த பொடி தேவையான அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி குழைத்து வீட்டில் கடவுள் சிலை இருந்தால் அந்த சிலைக்கு பூசலாம்.

கடவுள் படம் இருந்தால் அதற்கு இந்த திருமஞ்சனத்தை பூசலாம். இந்த பொடி வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்கும்.

விசேஷ நாட்களில் வீட்டில் உள்ள கடவுள் சிலைகளுக்கு இந்த பொடியை வைத்து அபிஷேகம் செய்யலாம். இதனால் வீட்டில் கோடி நன்மைகள் உண்டாகும்.