நாள்பட்ட குடற்புழு பிரச்சனை இருப்பவர்கள் அதை இயற்கை முறையில் வெளியேற்ற இங்கு சொல்லப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுங்கள்.
குடற்புழு அறிகுறிகள்:
**வயிற்றுப்போக்கு
**வயிற்று வலி
**தூக்கமின்மை
**குத பகுதியில் அரிப்பு
**உடல் சோர்வு
**சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் நிலை
குடற்புழுக்களை வெளியேற்றும் பானங்கள்:
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளைப்பூண்டு பற்கள் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
இரண்டு வெள்ளை பூண்டு தோல் உரித்துவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி கொள்ளுங்கள்.பின்னர் இதை வாயில் போட்டு பச்சையாக மென்று சாப்பிடுங்கள்.
அதன் பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிங்கள்.இதை செய்தால் குடலில் உள்ள புழுக்கள் முற்றிலும் அழிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பூசணி விதை – 50 கிராம்
2)சோயா பால் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் வாணலி வைத்து 50 கிராம் பூசணி விதை போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு கிளாஸ் சோயா பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி பூசணி விதை பொடி சேர்த்து நன்கு கலந்து பருக வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் குடற்புழுக்கள் மலத்தில் வந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பப்பாளி பழத் துண்டுகள் – ஒரு கப்
2)தண்ணீர் – அரை கப்
செய்முறை விளக்கம்:-
நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.
இதை மிக்சர் ஜாரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பப்பாளி ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் குடற்புழுக்கள் அழிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)மாதுளை தோல் பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மாதுளை தோல் பொடி சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த மாதுளை தோல் பானத்தை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகினால் குடற்புழுக்கள் மடிந்து மலத்தில் வந்துவிடும்.