எப்பேர்ப்பட்ட மலச்சிக்கல் பாதிப்பும் எளிதில் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றலாம்.
தீர்வு 01:
திரிபலா சூரணம்
நாட்டு மருந்து கடையில் திரிபலா சூரணம் கிடைக்கும்.இதை தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணம் சேர்த்து கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை காலையில் எழுந்ததும் செய்து பருகினால் எப்பேர்ப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
தீர்வு 02:
அத்தி பானம்
நன்கு உலர்ந்த அத்தி பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அத்தி பழத் துண்டுகளை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.
இந்த பானத்தை பருகினால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
தீர்வு 03:
நெய் பால்
இரவில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பசும் பாலில் சிறிதளவு நெய் கலந்து பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக குணமாகும்.
தீர்வு 04:
ஏலக்காய் பானம்
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் கால் தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள்.
இந்த பானத்தை தினமும் செய்து பருகி வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக குணமாகும்.
தீர்வு 05:
ஆப்பிள் சாறு
நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் பழத்தை ஜூஸாக அரைத்து பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக குணமாகும்.
தீர்வு 06:
ஓம பானம்
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடித்து பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
தீர்வு 07:
லெமன் டீ
ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகி வந்தால் குடல் கழிவுகள் தானாக வெளியேறும்.