உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு மருந்து செய்முறையை பின்பற்றி குறைத்துக் கட்டுப்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)நாட்டு சர்க்கரை – கால் கிலோ
2)இஞ்சி சாறு – கால் லிட்டர்
3)ஏலக்காய் – ஐந்து
செய்முறை விளக்கம்:-
150 கிராம் அளவிற்கு இஞ்சி துண்டு எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து கால் கிலோ நாட்டு சர்க்கரை கொட்டி சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து அதில் இஞ்சி சாறு ஊற்றி நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக சுண்டி வந்த பின்னர் அதில் ஐந்து ஏலக்காய் இடித்து போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு இதை நன்றாக ஆற வைக்க வேண்டும்.பிறகு ஒரு பாட்டிலுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.இதை தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் பித்தம் முழுமையாக குறையும்.
தேவையான பொருட்கள்:-
1)வெல்லம் – ஒரு தேக்கரண்டி
2)கிராம்பு – நான்கு
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு நான்கு இலவங்கத்தை அதில் போட வேண்டும்.
பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி வெல்லம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த கிராம்பு பானத்தை வடித்து குடித்தால் பித்தம் குறையும்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சீரகம் போட்டு வறுக்க வேண்டும.பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த சீரக பானத்தை வடித்து குடித்து வந்தால் பித்தம் தணியும்.