நரம்புகள் உறுதி பெற.. பச்சை மற்றும் கருப்பு பழ சாறு 50 மில்லி தினமும் குடிங்க மக்களே!!

Photo of author

By Divya

உடலை திடமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளோடு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.பழங்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.குறிப்பாக நரம்பு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்திக் கொள்ள திராட்சை மற்றும் சீத்தா பழ சாறு உட்கொள்ளலாம்.

சீத்தா பழ ஊட்டச்சத்துக்கள்:

வைட்டமின் பி,கால்சியம்,தாதுக்கள் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.இந்த பழத்தின் விதைகள் மற்றும் சீத்தா இலைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

திராட்சை பழ ஊட்டச்சத்துக்கள்:

வைட்டமின் சி,தாதுக்கள்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது .திராட்சை பழ விதை கேன்சர் செல்களை அழிக்கும் என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நரம்பு பலவீனம் அடைய காரணங்கள்:

1)நோய் தொற்று
2)நரம்பில் அடிபடுதல்
3)கணைய புற்றுநோய்
4)மூட்டு வலி
5)மோசமான உணவுப் பழக்கம்
6)வைட்டமின் பி குறைபாடு
7)தைராய்டு குறைபாடு

நரம்பு பலவீனமாதலின் அறிகுறிகள்:

1)உடலில் எரிச்சல் உணர்வு
2)குத்தல் வலி
3)அசாதாரண உணர்வு
4)தூக்கம் இழப்பு

நரம்பின் பலத்தை அதிகரிக்கும் பானம் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)சீத்தா பழம் – ஒன்று
2)கருப்பு திராட்சை – கால் கப்

செய்முறை விளக்கம்:-

**முதலில் நன்றாக கனிந்த சீத்தா பழம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் சதை பற்றை மட்டும் ஒரு கிண்ணத்திற்கு சேகரித்துக் கொள்ள வேண்டும்.

**அதற்கு அடுத்து கால் கப் அளவிற்கு கருப்பு திராட்சை பழத்தை எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

**பின்னர் மிக்சர் ஜாரில் இந்த இரண்டு பழத்தையும் போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.பிறகு தங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை அதில் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் உடல் நரம்புகள் வலிமைபெறும்.

**நரம்பு பலவீனம்,நரம்பு வீக்கம்,நரம்பு சுருட்டல் மற்றும் நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் இந்த பானத்தை பருகி வர நல்ல மாற்றம் ஏற்படும்.