கோலாகலமாக ஆரம்பித்து வெற்றிகரமாக இரண்டாம் நாளான இன்று தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது!! 

0
68
Today is the second day of the successful Vaccination Festival which started with a bang !!
Today is the second day of the successful Vaccination Festival which started with a bang !!

கோலாகலமாக ஆரம்பித்து வெற்றிகரமாக இரண்டாம் நாளான இன்று தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வை வாழ தொடங்கினர். தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகின்றது கோரோன வைரஸின் 2 ஆம்  அலை. இந்த 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்து வருகின்றாது.

பிரதமர், முதலமைச்சர் போன்ற பல அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். எனிலும் மக்களில் பலர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாறுகிறார்கள். கொரோனா தடுப்பூசி போடுவதால் வாந்தி, மயக்கம், உடல்நலம் குறைதல் போன்ற பக்க வில்லைவுகள் ஏற்படுகிறது. சிலருக்கு கொரோனா தடுப்பூசி எமனாகக் கூட மாறி விடுகிறது. இதனால் பெரிதும் அச்சத்தில் உள்ள பொதுமக்கள் இந்த கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த மதிய அரசு இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா என்று அனைத்து மாநிலங்களிலும் நடத்தி வருகிறது. இந்த தடுப்பூசித் திருவிழா தலைநகரான டெல்லியில் நேற்று ஆரம்பித்தாது. இரண்டாவது நாளாக இன்றும் கோலாகலமாக தடுப்பூசி போடும் திருவிழா நடைப்பெற்று கொண்டிருகிறது.

author avatar
CineDesk