நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!!

0
109
#image_title

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!!

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டு நேற்று ஆந்திராவின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலின் தீவிரத்தால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்து வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி கிடக்கிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இன்னும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கும் சூழலில் நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

தொடர் மழை காரணமாக ஏற்கனவே டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழையின் தாக்கம் குறையாத காரணத்தினாலும், சென்னை முழுவதும் மழை நீர் சூழுந்து இருப்பதாலும் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சென்னைக்கு மட்டும் இந்த விடுமுறை நாளை வரை நீடிக்கப்பட்டு இருக்கிறது.