மாணவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்!

0
197
Tragedy of the teacher who had fake marriage with the student!
Tragedy of the teacher who had fake marriage with the student!

 

மாணவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்!

உத்தரபிரதேச மாநில அம்பேத்கர் நகர் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை 35 வயது. இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இவர் தன் கணவன் மற்றும் தாயுடன் சில காலம் வசித்து வந்தார். அவளுடைய கணவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே அந்த ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டன.

இந்நிலையில் அப்பகுதி வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவனுடன் அந்த ஆசிரியைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனுடைய அந்த ஆசிரியை 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனை அறிந்த அதிர்ச்சி அடைந்த மாணவன் அவர்கள் இருவருக்கும் உண்டான உறவை முறித்துக் கொள்ள விரும்பினான்.

இது குறித்து அந்த மாணவன் ஆசிரியையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், முறைதவறிய இந்த உறவு, சமூகத்தில் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், அவன் ஆசிரியையுடனான உறவில் இருந்து வெளியேற விரும்பியுள்ளான். ஆனால் அதற்கு அந்த ஆசிரியை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையல் மாணவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த நிலையில் அந்த மாணவன் ஆசிரியை தனியாக வீட்டில் இருந்ததே தெரிந்து கொண்டன். யாருமில்லாத நேரத்தில் கூர்மையான கத்தியை எடுத்து கொடூரமாக பலமுறை குத்தி கொலை செய்தான்.

இந்த மாணவன் விசியம் வெளிய தெரிய கூடாது என்று எண்ணி இந்த வழக்கை திருட்டு வழக்காக மாற்றி முயற்சித்தன். அந்த வீட்டில் உள்ள பீரோவில் இருந்து ஐந்தாயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு மாணவன் தப்பி ஓடி விட்டான். ஜூன் 1 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், காவல்துறையினர் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். அப்பொழுது அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் ஒருவன் சந்தேகபடும்படியாக டி-சர்ட் அணிந்து கொண்டு அங்கே நடமாடியதை கண்டனர்.

அந்த டி-சர்டில் இருந்த நிறுவனத்தின் பெயரை வைத்து துணிக்கடைகளில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் நேற்று அந்த மாணவனை மடக்கிப்பிடித்து உண்மையை வெளிக்கொனர்ந்தனர். மேலும், ஆசிரியையை கொலை செய்த 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான். இது குறித்து போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்ட சிறுவன் கொலை செய்யப்பட்ட ஆசிரியையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், முறைதவறிய இந்த உறவு, சமூகத்தில் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் கொலை செய்தாக கூறினான்.

author avatar
CineDesk