லாரி மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! ஈரோட்டில் பரபரப்பு!

0
224
Truck and bike collide head-on accident! Sensation in Erode!
Truck and bike collide head-on accident! Sensation in Erode!

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! ஈரோட்டில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை வாய்க்கால் புதூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (35) . இவர் பெயிண்டர்ரக  வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அவரத்தின் சொந்த வேலைக்காக பசுவபட்டி பிரிவு பகுதியில் அவருடைய  மோட்டார்சைகளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சங்கரின் முன்னால் லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது சங்கரின் மோட்டர்சைக்கில் எதிர்பாராதவிதமாக மோட்டர்சைக்கிள் லாரியின் மீது மோதியது. அதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் சங்கரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனவும் கூறினார்கள். மேலும் இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K