கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்

0
91
Two people from the same area were killed! The people of the area were overwhelmed with grief!
Two people from the same area were killed! The people of the area were overwhelmed with grief!

கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்!

திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செண்பகம் இவரது ஒரே மகன் முத்துவேல் ராஜா வயது 20 .மற்றும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன்  முத்துராஜா வயது 20. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கமும் உண்டு. இருவரும் மன அமைதிக்காக வெளியில் சென்று வருவார்கள். அப்போது முத்துவேல் ராஜா கடைகளுக்கு சென்று வரலாம் வா  என்று அழைத்தார்.

இருவரும் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றார்கள். சிவரக்கோட்டை சந்திப்பில் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது திடீர் என்று எதிர்பார்க்காத நேரத்தில் மதுரை நோக்கி வந்த கார் அவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அப்போது இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் சென்ற முத்துவேல் ராஜா மற்றும் முத்துராஜா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்களை எடுத்துச் செல்லும் வழியிலேயே முத்துவேல் ராஜா உயிரிழந்தார். மேலும் காயமடைந்த முத்துராஜா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்தை குறித்து மக்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கள்ளிக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து கார் ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் கார் ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த சிக்கந்தர் வாகித் என்பவர் என தெரியவந்தது. மேலும் விசாரணை முடிவில் அவர் கார் மிக அதிக வேகத்துடன் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

author avatar
Parthipan K