பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

0
88

பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வல்லம் எனும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.  இவரது மனைவி ஜெயகாந்தி.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.   மூத்த மகன் சிவகுமார் (47) மனைவி அமுதா (42) இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆனது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் மற்றும் குடும்பத்தகராறு அடிக்கடி வந்து போகும். ஒரு நாள் குடும்பத்தகராறு  ஏற்பட்டபோது சிவகுமார் முடி வெட்டும் கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி அமுதா அதிர்ச்சி அடைந்து. குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.

அப்போது  குடும்பத்தினர் அனைவரும்  பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்தும் சிவக்குமார் கிடைக்கவில்லை. அதனையடுத்து  சிவகுமாரின் தாய் ஜெயகாந்தி முத்தான்டிக்குப்பம் போலீசாரிடம்  புகார் அளித்தார். அந்த புகாரின்  பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் சிவக்குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் பொழுது   செல்வராஜ் மற்றும் ஜெயகாந்தி அவர்களின் இரண்டு மகன்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து வீட்டில் இருந்த கடைசி மகனான சுரேஷ்குமார் மாயமானார். இது குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து அந்த புகாரின் பெரில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இருவர் மயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K