இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

Photo of author

By Parthipan K

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

Parthipan K

Two two-wheeler collide head-on accident! One victim!

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

கேரளா மாநிலம் தனுவச்சபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவர் நேற்று முன்தினம் பளுகல் பண்டாரகோணம் பகுதியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு  மீண்டும் அவருடைய மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது அவர் பளுகலை அடுத்த மத்தம்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியில் எதிரில் அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷ்குமார் சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிளின் மீது மோதியது அந்த விபத்தில் சுரேஷ்குமார் தூக்கி வீசப்பட்டார்.அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சுரேஷ்குமாரை மீட்டு பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனவும் கூறியுள்ளனர்.இந்த விபத்து குறித்து சுரேஷ்குமாரின் மகள் ரேஷ்மா பளுகல் போலீசார்ரிடம் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.