15 நிமிட சவாரிக்கு 32 லட்சம் ரூபாய் பில்லா?… அதிர்ச்சி கொடுத்த உபெர் நிறுவனம்

0
84

15 நிமிட சவாரிக்கு 32 லட்சம் ரூபாய் பில்லா?… அதிர்ச்சி கொடுத்த உபெர் நிறுவனம்

22 வயதான ஆலிவர் கப்லான் சமீபத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பாக்ஸ்டன் ஹோட்டலில் இல் பணிபுரிந்த பிறகு, பயணம் செய்ய சவாரி-பகிர்வு பயன்பாட்டைப் பயன்படுத்தினார். சமையல் தொழில் செய்யும் கப்லன் காரர் நான்கு மைல் தொலைவில் உள்ள விட்ச்வுட் என்ற இடத்தில் தனது நண்பர்களைச் சந்திக்க செல்லதான் அந்த ரைடை முன்பதிவு செய்துள்ளார்.

பயணத்தை முடித்து கணக்கைச் சரிபார்த்தபோது, ​​15 நிமிட பயணத்திற்கு கிட்டத்தட்ட $39,317 ஏறக்குறைய 32 லட்சம் ரூபாய் உபெர் வசூலித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

திரு கப்லான் இதுபற்றிக் கூறும் போது, “நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் பெரும்பாலான இரவுகளில் செய்வது போல் உபெரை ஆர்டர் செய்தேன். டிரைவர் வந்தார், நான் Uber இல் ஏறினேன், நான் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். இது 15 நிமிட பயணம்தான். திரு கப்லன் மேலும் கூறினார். மறுநாள் காலை ஊபரில் இருந்து செய்தி வரும் வரை அந்த சம்பவத்தை அவர் மறந்துவிட்டேன்.

அடுத்த நாள் காலை நான் தூக்கத்தில் இருந்து எழுந்தபோது, ​​நான் செய்த பயணத்துக்காக £35,000 ($39,317) வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததைதான். ஆனால் அவர் வங்கிக் கணக்கில் அவ்வளவு பணம் இல்லாததால் அவர்களால் எடுக்க முடியவில்லை.” என தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக கப்லான் உபெர் நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் இது தொழுல்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்டு இருக்கும் என சொல்லப்படுகிறது.