அல்சர்: தேங்காய் பாலில் இந்த இலையின் சாற்றை சேர்த்து குடியுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!

அல்சர்: தேங்காய் பாலில் இந்த இலையின் சாற்றை சேர்த்து குடியுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!

உண்ணும் உணவில் அதிக கவனம் இருக்க வேண்டும்.தாமதம் இன்றி மூன்று வேளை உணவையும் தவறாமல் சாப்பிட வேண்டும்.ஆனால் வேலைப்பளு,டயட் போன்ற காரணங்களால் பலர் உணவை தவிர்த்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ருசிக்காக காரசாரமான உணவை சாப்பிட்டு வந்தால் குடல் பகுதியில் புண் ஏற்படும்.

அல்சர் அறிகுறிகள்:

*வயிறு எரிச்சல்
*எடை குறைவு
*மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு
*வயிறு உப்பசம்
*வயிற்று வலி

அல்சர் பாதிப்பை குணமாக்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள:-

1)தேங்காய் துண்டுகள் – 1 கப்
2)வேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

ஒரு கப் அளவு கொப்பறை தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.தேங்காய் பால் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை நீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை அரைத்த தேங்காய் பாலில் சேர்த்து காலை நேரத்தில் குடித்து வந்தால் அல்சர் முழுமையாக குணமாகும்.