இவர்களுக்கும் இனி சீருடை! உயர்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

0
129
Uniforms for these people! Action order issued by the Department of Higher Education!
Uniforms for these people! Action order issued by the Department of Higher Education!

இவர்களுக்கும் இனி சீருடை! உயர்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

உயர்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்கள் சுதந்திரம் என நினைத்து கண்ணியக்குறைவான ஆடைகளை அணிந்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.

கல்லூரிகளில் பாடம் நடத்தும்போது பெண் பேராசிரியர்கள் சேலை அணிந்து வருவதால் மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுகின்றது என கூறபடுகிறது.பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்கம் ,தொழில்நுட்ப கல்வி இயக்கம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்த தகவல் சமந்தப்பட்ட பேராசிரியைகள் மற்றும் விரிவுரையலர்க்ளின் கவனத்திற்கும் கொண்டு செல்லபட்டுள்ளது.

அரசு தரப்பின் அறிவுறுத்தலில் டீசண்ட் டிரஸ்கோடு என்ற வாசகம் தான் இடம் பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்களின் சங்கத்தலைவர் தெரிவித்துளார்.பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சீருடை கட்டுப்பாடு உள்ளது அதுபோல தற்போது கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் உடை கட்டுபாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K