மாணவர்கள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு: டெல்லியில் பரபரப்பு!

0
66

கடந்த சில வாரங்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், மாணவர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நேற்று நள்ளிரவில் மீண்டும் மர்மநபர்கள் 2 பேர் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் இதுவரை மொத்தம் மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை உடனடியாக கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. நெல்லையில் நேற்று நள்ளிரவு சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது