முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க பச்சை பயறு பயன்படுத்துங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

0
60
#image_title

முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க பச்சை பயறு பயன்படுத்துங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

நம்மில் பலரது முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும்.இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம்.இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து பொலிவிழந்த முகத்தை அதிக பொலிவாக மற்ற இந்த வழியை பாலோ செய்யுங்கள் போதும்.

தேவையான பொருட்கள்:-

*கசகசா – 1 தேக்கரண்டி

*பச்சை பயறு – 1 கைப்பிடி அளவு

*கருந்துளசி – சிறு இலைகள் 20

*தக்காளி – 1

*ரோஸ் வாட்டர் – தேவையான அளவு

செய்முறை:-

*முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பச்சை பயறு 1 கைப்பிடி அளவு,கசகசா 1 தேக்கரண்டி அளவு சேர்க்கவும்.அத்தோடு கருந்துளசி 20 இலைகள் என்ற எண்ணிக்கையில் சேர்த்து ஒரு சுத்து விடவும்.பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.இதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.

*அடுத்து ஒரு தக்காளி பழம் எடுத்து அதே மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.இதை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பச்சை பயறு கலவையில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

*இந்த பேஸ்டை முகத்தில் போடுவதற்கு முன் ரோஸ் வாட்டர் சிறிதளவு எடுத்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும்.அடுத்து தயார் செய்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து கொள்ளவும்.அரை மணி நேரம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்யவும்.இதை தொடர்ந்து பின்பற்றி வந்தோம் என்றால் பொலிவற்று இருந்த முகம் 1 வாரத்தில் பொலிவு பெற்று விடும்.