ரணகள்ளி என்று அழைக்கப்படும் தாவரம் நமது சிறுநீரகத்தில் தேங்கும் கற்களை கரைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது.இந்த ரணகள்ளி மலைக்கள்ளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.இந்த தாவர இலையின் சாறை பருகினால் சிறுநீரக கல் காணாமல் போகும்.
சிறுநீரக கல் பாதிப்பு இந்த காலத்தில் பொதுவான நோயாக மாறிவிட்டது.சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம்தான் குணப்படுத்த முடியும் என்றில்லை.நமது பாரம்பரிய வைத்தியத்தை செய்தும் சிறுநீரக கற்களை முழுமையாக கரைத்து வெளியேற்றலாம்.
தேவையான பொருட்கள:-
1)ரணகள்ளி இலை – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஒன்று அல்லது இரண்டு ரணகள்ளி இலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை காலையில் வெறும் வாயில் மென்று சாப்பிட வேண்டும்.
ரணகள்ளி இலையை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.இப்படி செய்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் ஐஸ்கட்டி போல் கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)ரணகள்ளி இலை – ஒன்று
2)தண்ணீர் – 100 மில்லி
செய்முறை விளக்கம்:-
முதலில் ரணகள்ளி இலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு 100 மில்லி தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இந்த ரணகள்ளி ஜூஸை தினமும் ஒரு கிளாஸ் அளவு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கல் காணாமல் போய்விடும்.