21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடிய தூக்கி போட்ருவிங்க!

0
320
#image_title

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக கம்ப்யூட்டரில் மற்றும் செல்போன்களை பார்ப்பதால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. கண்பார்வை குறைகிறது. கண்மங்கல் ஏற்படுகிறது. கிட்ட பார்வை தூரப்பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு நாட்டு வைத்தியத்திலேயே நாம் நல்ல முறையை பயன்படுத்தி சரி படுத்தலாம்.

21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்த பானத்தை குடித்து வரும் பொழுது, கண்ணாடியை நீங்கள் அணிய தேவையில்லை, கிட்ட பார்வை தூரப்பார்வை கண் மங்கல், கண் எரிச்சல் ஆகியவற்றையும் குணம் செய்யும்.

வாருங்கள் இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. பொன்னாங்கண்ணி கீரை

2. தக்காளி அரைப்பழம்

3. வெங்காயம் ஒன்று

4. பூண்டு 10 பல்

5. சீரகம் அரை ஸ்பூன்

6. மிளகு அரை ஸ்பூன்.

 

செய்முறை:

 

1. பொன்னாங்கண்ணிக் கீரை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். பொன்னாங்கண்ணி இலையில் உள்ள வைட்டமின் சத்துக்கள் நமது கண்ணிற்கு சக்தியை அளிக்க கூடியவை. கண்ணில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியவை.  நாட்டு பொன்னாங்கண்ணி என்று கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்.

2.  பொன்னாங்கண்ணி கீரையை ஒரு கையளவுக்கு எடுத்துக் கொண்டு, கழுவி மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும்.

3. அதில் அரை  தக்காளியை சிறிதாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.

4. பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

5. 10 பல் பூண்டு எடுத்து சேர்த்துக் கொள்ளவும்.

6. சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

7. இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ளவும்.

8. 300 ml  தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.

9. நன்கு தண்ணீர் பாதியாக வரும் வரை கொதிக்க வைக்கவும்.

10. பின் வடிகட்டி குடிக்கவும்.

11. வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் குடிக்க வேண்டும்,

 

செய்து பாருங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்.

author avatar
Kowsalya