தலைகீழாக கவிழ்ந்த வேன்! ஒருவர் பலி 16 பேர் கவலைக்கிடம்!

0
87
Van overturned! One person died and 16 people are worried!
Van overturned! One person died and 16 people are worried!

தலைகீழாக கவிழ்ந்த வேன்! ஒருவர் பலி 16 பேர் கவலைக்கிடம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள்  சிலர் கட்டிட தொழிலாளார்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று  அவர்களில் 16 பேர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ராஜன் நகரில் விருந்து நிகழ்ச்சிக்காக சரக்கு வேனில் சென்றுள்ளனர். அதனையடுத்து விருந்து நிகழ்ச்சியை முடித்து விட்டு அனைவரும் சரக்கு வேனில் திரும்பி வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அந்த சரக்கு வேனை சத்தியமங்கலத்தை சேர்ந்த சல்மான் என்பவர் இயக்கி வந்துள்ளார். சத்தியமங்கலத்தை அடுத்த தாண்டம்பாளையம் அருகே அந்த வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சரக்கு வேனானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

மேலும் அந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் புதுக்காடு பகுதியை சேர்ந்த கவிதா(26) என்ற இளம்பெண் வேனின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேனின் ஓட்டுனர் உள்பட 16 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K