என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் !

0
191

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் !

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி திரையுலகில் நுழைந்த போது தனக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சொல்லியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இந்த 8 ஆண்டுகளில் நடிகை வரலட்சுமி தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி, மாரி 2 உள்ளிட்ட 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள ‘வெல்வெட் நகரம்; திரைப்படம் தான் அவரது 25வது திரைப்படம். இது சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ‘நான் சினிமா பிரபலத்தின் மகள் என தெரிந்தும் வாய்ப்புக்காக சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைத்தனர். அட்ஜெஸ்ட் செய்யும்படி கேட்டார்கள். இது சம்மந்தமான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. பெண்கள் எல்லாம் முடிந்தபின் புகார் சொல்வது சரியாக இருக்காது. தங்களை தாங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் !

இவரது இந்த பேட்டியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவரது தந்தையின் மனைவி வரலட்சுமியைப் பாராட்டியுள்ளதோடு ‘உனக்க்கு இன்னும் சக்திகள் கிடைக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மி டூ மிகப்பெரிய இயக்கமாக உருவான போது இதை சொல்லாமல் இப்போது சொல்கிறாரே என கேள்வியும் எழுந்துள்ளது.

Previous articleபேட்ஸ்மேன்கள் மேல் பழி சொல்ல விரும்பவில்லை: பூம்ரா பெருந்தன்மை !
Next articleபாறை மீது பயிர் செய்து பரவசமூட்டும் குமரி விவசாயி..! மாத்தி யோசி.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here