அரசியலில் வருவதற்கான செயலில் விஜய் தீவிரம் – சீமான் பேச்சு!

0
229
#image_title

அரசியலில் வருவதற்கான செயலில் விஜய் தீவிரம் – சீமான் பேச்சு!

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அரசியலில் வருவதற்கான செயலில் நடிகர் விஜய் தீவிரம் என்று பேசியுள்ளார்.

நடிகர் விஜய் வைத்துள்ள “விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படும் அது உறுதி.

இந்த இயக்கத்தை கட்சியாக மாற்றுவதற்கு தான், அவர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வது, மக்களுக்கு உதவிகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

தீரன் சின்னமலை, மற்ற தலைவர்களின் நினைவுநாளில் கூட, அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் எனவும்  உத்தரவிட்டுள்ளார்.

விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி, என்பதை எப்பொழுது விஜய் சொல்லுவார் என்று “புஸ்ஸி ஆனந்திற்கு கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்.  நடிகர் விஜய் விரைவில் அரசியல் கால் பதிப்பார், என தெரிகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்வதெல்லாம் பொய், அவர் வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அனைத்தையும் செய்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவை தேடி அவர் செல்ல வேண்டாம், நாங்கள் தான் எங்களுக்கு ஆதரவு கேட்டு அவர் பின்னால் செல்ல வேண்டும்”.

அரசியல் வருவதற்கு முயற்சி செய்யும் நடிகர் விஜயை, நாம் தமிழர் கட்சி அன்போடு வரவேற்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு என்று சில விதிமுறைகள் இருக்கிறது.

அந்த விதிமுறைக்கு நீங்கள் ஒப்புக் கொண்டால், என்னுடன் சேர்ந்தே நீங்கள் அரசியல் செய்யலாம், என்று சீமான் பேசியுள்ளார்.

அதற்கு விஜயின் ரசிகர்களும் அவர்களது தரப்பில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.