2 நிமிடத்தில் உங்களது வாயு தொல்லை நீங்க வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் டிரிங்! 

0
227
#image_title

2 நிமிடத்தில் உங்களது வாயு தொல்லை நீங்க வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் டிரிங்! 

நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம். எந்தப் பொருட்கள் சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும். அந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள். சிலருக்கு பால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும்.

வாயு தொல்லையை குறைக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

ஒரு டம்ளரில் சூடான வெந்நீர் ஊற்றவும். அதில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்க்கவும். பெருங்காயம் வாயு தொல்லையை போக்கக்கூடிய அற்புதமான மருந்து. இது குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வாயுவை வெளியேற்றும்.

ஆயுர்வேத முறைப்படி பெருங்காயம் வாதத்தை சமன் செய்யும். வாத தோஷம் நீங்கினாலே வாயு தொல்லையும் நீங்கிவிடும்.

நீரில் பெருங்காயம் ஒரு சிட்டிகை, ஒரு சிட்டிகை இந்துப்பு சேர்த்து கலக்கி உங்களுக்கு வாயு தொல்லை ஏற்படும் நேரமெல்லாம் குடிக்கலாம். இந்துப்பு இல்லையெனில் சாதாரண உப்பை பயன்படுத்தலாம். மிகவும் அதிகமாக வாயுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் இதில் இன்னும் சில பொருட்களை சேர்த்து குடிக்க வேண்டும்.

ஒரு டம்ளரில் சூடான வெந்நீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை இந்துப்பு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, மற்றும் இரண்டு கிராம்பை தட்டி போடவும். இதைக் கடுமையான வாயு இருக்கும் சமயங்களில் குடித்தால் போதும் வாயு தொல்லை உடனடியாக நீங்கும்.

நாம சாப்பிடும் உணவு செரிக்கும்போது இயல்பாகவே வாயு உருவாகும் அது சாதாரண முறையில் வெளியேறினால் நல்லது ஆனால் கெட்ட வாடையுடன் வெளியேறக் கூடாது. இந்த பானத்தை வாயில் இருக்கும் சமயங்களில் குடித்து வந்தால் உங்களது வாயு நீங்கி உங்கள் குடல் சுத்தமாகும்.  வயிற்று வலி நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.