சர்க்கரை அளவு குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி ஆவாரம் பூ!

0
217
#image_title

சர்க்கரை அளவு குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி ஆவாரம் பூ!

ஆவாரம் பூவை பொடி செய்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.இந்த ஆவாரம் பூவானது அனைத்து இடங்களிலும் அதாவது காடு நிறைந்த பகுதிகளில் கிடைக்கக்கூடும். இந்த ஆவாரம் பூவில் ஏராளமான சத்துக்களும், நன்மைகளும் நிறைந்துள்ளது.

இந்த ஆவாரம் பூவானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. டைப் 2 சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த ஆவாரம் பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 400 டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை ,மாலை என இரு வேலைகளிலும் டீயாக குடித்து வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

இந்த ஆவாரம் பூவில் இன்சுலின் அளவை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ஆகையால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகிறது. மேலும் சரும அழகை மேம்படுத்தும். இந்த ஆவாரம் பூவை பொடியாக்கி குளிக்கும் போது தேய்த்து குளித்து வர சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். மேலும் இரவு தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் இந்த ஆவாரம் பொடி போட்டு குடித்து வர சர்மா அழகு மேம்படும். உடல் சூட்டை குறைக்கும். இந்த ஆவாரம் பூவில் உள்ள அனைத்து பாகங்களும் நம் உடலில் உள்ள வறட்சியை நீக்கி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இந்த ஆவாரம் பவுடருடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர உடல் உஷ்ணம் தீர்ந்து உடல் சூட்டையும் குறையும். வயிற்றில் உள்ள கிருமிகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இந்த ஆவாரம்பூ உதவுகிறது. வயிறு சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இந்த ஆவாரம் பூவை பச்சையாக மென்று சாப்பிட்டு வர வயிறு பிரச்சனை அனைத்தும் குணமாகிறது.

பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சினையை இந்த ஆவாரம் பூ சரி செய்யும். பெண்கள் மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய வலி, உதிரப்போக்கு போன்றவற்றை சரி செய்ய ஆவாரம் பூவை டீயாக குடித்தால் போதும் மாதவிடாய் பிரச்சனை தீர்ந்து விடும்.

author avatar
Parthipan K