இதய நோய் பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறி வருகிறது.தற்பொழுது இளம் தலைமுறையினர் பலருக்கு இதய நோய் ஆபத்தாகி வருகிறதுஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் மாரடைப்பு அதிகரிக்கிறது.
முன்பைவிட தற்பொழுது உணவுக் கலாச்சாரம் மோசமாக இருப்பதால் எளிதில் ஆபத்தான நோய் பாதிப்புகள் அண்டுகிறது.கொழுப்பு உணவுகள்,எண்ணெய் உணவுகள்,துரித உணவுகளால் இதய ஆரோக்கியம் மோசமாகி பல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
அதேபோல் மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் இதய ஆரோக்கியம் பாழாகிறது.இதனால் எந்த நேரத்திலும் மாரடைப்பு சந்திக்க வேண்டிய சூழலில் இந்த தலைமுறையினர் உள்ளனர்.
உலகில் இதய நோய் பாதிப்பு நோய்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.இந்த நோய் எந்தஒரு அறிகுறியையும் எளிதில் வெளிக்காட்டாது.நன்றாக இருக்கும் ஒருவர் திடீரென்று சரிந்து உயிரை விடுவதை அடிக்கடி செய்திகளில் கவனித்திருப்பீர்கள்.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இதய நோய் பாதிப்பு அதிகரித்துவிட்டது.
நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியது முக்கியம்.ஒருவேளை உங்கள் இதயம் பலவீனமாக இருந்தால் அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் வைத்து.
இதய பலவீனத்தை உணர்த்தும் 05 முக்கிய அறிகுறிகள் இதோ:
1)நெஞ்சு பகுதியில் அசௌகரிய உணர்வு
2)நெஞ்செரிச்சல்
3)தலைச்சுற்றல்
4)தொண்டை வலி
5)தோள்ப்பட்டை வலி மற்றும் கை வலி
இந்த ஐந்து அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.